வடகிழக்கு பருவமழை: திருச்சியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, உதவி எண்களும் அறிவிப்பு…!
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேர மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள், மழையால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை இக்கட்டுப்பாட்டு அறையின் 1077, மற்றும் 0431-2418995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமும் புகார் அனுப்பலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
அதற்கான எண்கள் வருமாறு:-
திருச்சி கிழக்கு
0431-2711602,
94454 61808
திருச்சி மேற்கு
0431 2410410,
94450 00602
திருவெறும்பூர்
0431 2555542,
97900 93270
ஸ்ரீரங்கம்
0431- 2230871,
94450 00603
மணப்பாறை
04332 260576,
94450 00604
மருங்காபுரி
04332 299381,
98403 78255
மண்ணச்சநல்லூர் 0431 2561791,
94450 00606
முசிறி
04326 260226,
94450 00607
துறையூர்
04327 222393,
94450 00609
தொட்டியம்
04326 254409,
94450 00608
இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கோ, அல்லது வட்டாட்சியர்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது பரவாலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகள் செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.