Rock Fort Times
Online News

வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா…!.

உஷாராக இருக்க மத்திய அரசு உத்தரவு...

வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. புதிய வகை கொரோனா மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி ஆயோக், சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, உலக அளவில் நிலவும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. 50 நாடுகளில் இஜி.5 வகை கொரோனா வைரஸும், 4 நாடுகளில் பிஏ.2.86 வகை கொரோனா வைரசும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அவ்வாறு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள சுகாதாரத்துறை ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்த பி.கே.மிஸ்ரா, புதிய வகை கொரோனாவை மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்