Rock Fort Times
Online News

மினி பஸ் சேவைகளுக்கான புதிய நடைமுறைகள் ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது !

தமிழகத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் நோக்கில், தனியார் மினி பஸ் சேவை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில், ‘தனியார் சிற்றுந்துகளை போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கி.மீ. இயக்கவும், சேவையுள்ள இடங்களில் 4 கி.மீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ கூடுதலாக இயக்க மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிமூலம் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு சிற்றுந்து சேவை கிடைக்கும். மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்