Rock Fort Times
Online News

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை இடையே அந்த பாலம் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த மாதம் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீர் கடந்த 14ம் தேதி திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் ஓரளவுக்கு தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு பாலப்பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மணல் திட்டில் ஒரு பகுதி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. தண்ணீர் முழுவதுமாக வற்றிய பிறகுதான் மீண்டும் பாலப்பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்