Rock Fort Times
Online News

பிரதமர் திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டி அமைத்து தருவதாக கூறி மூதாட்டியிடம் 14 பவுன் நகைகளை திருடிச் சென்ற டிப்-டாப் ஆசாமிகளுக்கு வலை…!

திருச்சி கீழ தேவதானம் டவுன் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகுமார். இவரது மனைவி ராணி (வயது 61). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இரண்டு டிப்-டாப் ஆசாமிகள் அவரது வீட்டிற்கு வந்தனர். வீட்டில் இருந்த ராணியிடம் நாங்கள் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி தர உள்ளோம். உங்கள் வீட்டில் குடிநீர் தொட்டி எங்கு வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனை நம்பிய ராணி, ஒரு நபரை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றார். அந்த நேரத்தில் கீழே நின்ற டிப்-டாப் ஆசாமி வீட்டின் அறைக்குள் நுழைந்து பீரோவில் இருந்த மோதிரம், செயின், வளையல் உள்ளிட்ட 14 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.பிறகு மாடியில் இருந்து ராணியுடன் கீழே இறங்கி வந்த மற்றொரு டிப்- டாப் ஆசாமி இன்னொரு நாள் வருகிறேன் கூறி சென்று விட்டார். பிறகு வீட்டின்அறையில் ராணி சென்று பார்த்த போது
அங்கு பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசில் ராணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பவுன்
நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற 2 டிப்டாப் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்