திருச்சி, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் அதிமுக இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு…* மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் திறந்து வைத்தார்!
கோடை காலத்தை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தணிக்க உதவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டிருந்தார். அதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்கனவே பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அன்னதான சத்திரம் அருகே மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதி வாணன், அவைத்தலைவர் ஐயப்பன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி,
புத்தூர் ராஜேந்திரன், கலீல் ரகுமான், ரோஜர், கலைவாணன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, அணி நிர்வாகிகள் ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, ஞானசேகர், ராஜேந்திரன், அப்பாஸ், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா, ஜெயராமன், இளைஞரணி சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், உறந்தை மணிமொழியன், இன்ஜினியர் ரமேஷ், கதிர்வேல், கே.பி.ராமநாதன், ரமணிலால், சிங்கமுத்து, தர்கா காஜா, கே.டி.அன்பு ரோஸ், கேடி ஏ. ஆனந்தராஜ், அப்பாகுட்டி, உய்யக்கொண்டான் திருமலை தினேஷ்குமார், மலைக்கோட்டை ஜெகதீசன், புத்தூர் பாலு, ராஜா, அக்பர் அலி, செல்வராஜ், புத்தூர் பாலு, புத்தூர் சதீஷ்குமார், பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை சக்திவேல், உடையான்பட்டி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.