நாகலாந்து கவர்னரும் பா.ஜ., முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.நாகலாந்து கவர்னராக இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து தங்குவது இல.கணேசனின் வழக்கம். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார். கடந்த 8ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உணர்வு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் இல.கணேசன் வைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(ஆக.,15) அவர் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.