திருச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற நடப்போம் நலம்பெறுவோம் நடை பயிற்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 8 கிலோமீட்டர் தூர நடைபயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் திருச்சி உழவா் சந்தை அண்ணாநகர் அறிவியல் பூங்காவில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சியில் பங்கேற்றனர். இந்த நடைபயிற்சி அண்ணா நகர் அறிவியல் பூங்காவிலிருந்து தொடங்கி நீதிமன்ற சாலை வழியாக குழுமாயி அம்மன் கோவில் வரை சென்று நிறைவடைந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.