பாமக இளைஞர் அணி பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். ராமதாஸ் குலதெய்வம் என்றும் அன்புமணி எதிர்காலம் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார். பாமக பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை அன்புமணிக்கு, முகுந்தன் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024-ம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். ராமதாஸ் தான் என்றென்றும் எனது குலதெய்வம். அன்புமணி ராமதாஸ் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேடையிலேயே அன்புமணி ராமதாஸ் மைக்கை தூக்கி வீசியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் முற்றி வருகிறது. அவர்களிடையே சமரசம் ஏற்படுத்த முகுந்தன் தனது பதவியிலிருந்து விலகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Comments are closed.