Rock Fort Times
Online News

முக்கொம்பு மேலனை காவிரி பாலத்தில் 35 வது மதகில் விரிசல் பொதுமக்கள் அச்சம் !

மேட்டுரிலிருந்து வரகூடிய காவிரி நீர் சேலம. நாமக்கல்,திருச்சி, தஞ்சை,நாகபட்டினம் திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாகவும்,உயிர். நாடியாகவும. விளங்கி வருகிறது. இப்படி மேட்டூரிலிருந்து வரகூடிய தண்ணீர் திருச்சி திருப்பராய்த்துறை தீர்த்தவாரி நடைபெறும் காவிரி ஆற்றின்.அருகில் கூம்பு போன்ற இட அமைப்பை கொண்டு ,அந்த பகுதியில் காவிரி ,கொள்ளிடம. என இரண்டாக பிரிந்து செல்வதால் இந்த பகுதி முக்கொம்பு என பெயர் பெற்று இன்று வரை திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலம் சுமார் 130 வருடங்களுக்கு மேலாக கட்டப்பட்ட பழமைவாய்ந்த்தாகும். இந்த பாலம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக ஐந்தாவது மதகு முதல் ஒன்பதாவது மதகு வரையுள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதனால் விவசாய பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கொள்ளிடம் பாலம் கட்டப்பட்டு உள்ளது. அதேபோல் காவிரி பாலமானது 42 மதகுளைக் கொண்ட பாலமாகும். இந்த பாலம் கடந்த 74 ஆண்டு முதல் 77 ம் வருடம் வரை கட்டி முடிக்கப்பட்டது . அவ்வப்போது காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றும்,வண்ணம் பூசும் பணியும் காவிரி பாலத்தில் நடைபெறும. இந்த பாலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள ளது. ஆனால் காவிரி பாலத்தில் உள்ள 35 வது மதகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.   குறிப்பாக காவிரி பாலமானது தன்னுடைய பாலத்தின் பக்கவாட்டிலிருந்து விலகி மேற்கு பகுதி நோக்கி சாய்ந்துள்ளது.. இந்த விரிசலானது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறைவான அளவில் இருந்தது ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல பாலத்தின் விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இதனால் காவிரி பாலம் உடையம் அபாய நிலையில் உள்ளதா என்று பொதுமக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொதுபணித்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மேலனை காவிரி பாலத்தில் கனரக வாகணங்கள் செல்வதற்கு அனுமதி இல்லாதவாறு பாலத்தின் முன். பகுதியில் இரும்பு தூண் கொண்டு தடுப்பு கம்பிகளை அமைத்தனர். காவிரி பாலத்தின் விரிசல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்பிகள அமைக்கப்ட்டுள்ளது என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நாளடைவில் இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் மற்றும வாழைக காய. ஏற்றிகொண்டு செல்லகூடிய லாரிகள. சர்வ சாதரனமாக சென்று வருகன்றன.. இந்திந்த நிலையில் காவிரி பாலத்தில் பாதிக்கப்பட்ட 35 வது மதகின் அருகில் உள்ள 38 வது மதகு பகுதியில் பாலத்தின் பக்கவாட்டில் இருந்து புதியதாக விரிசல் ஏற்பட்டு உள்ளது தற்பொழுது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பாலத்தில் மற்றொரு மதகுப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. . பாலத்தின் அடிப்பகுதியில் காப்பர் பீம் போட்டு கட்டப்பட்டிருப்பதால் பாலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர்.. ஆனால் இயற்கையின் சீற்றத்தோடு ஒப்பிடுகையில் நாளுக்கு நாள் விரிசல் ஏற்படுத்திக் கொண்டே செல்லும் இந்த பலமானது உடைந்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துமா என்று பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்