மணப்பாறையில் நாளை நடக்கும் சாரண, சாரணியர் இயக்க நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு- தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் அறிக்கை…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண- சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு
பெருந்திரளணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் நிறைவிழா நாளை(02-02-2025) நடைபெறுகின்றன. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதுதொடர்பாக திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட கழக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மணப்பாறையில் நடக்கும் பாரத சாரண, சாரணியர்
இயக்க வைர விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகின்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து முதல்வருக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்திட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.