ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்குவாசல் கோபுரத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இன்று காலை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, இடிந்து விழுந்த கிழக்கு வாசல் கோபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.