திருச்சி மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் 2022-2023ன் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ராம்ஜிநகர் கொத்தமங்கலம் பகுதியில் நவீன பொது சுகாதார வளாகம் மற்றும் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின் மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, அமைச்சர் கே. என்.நேரு இன்று ( 06.07.2023 ) திறந்து வைத்தார். மேலும், கருமண்டபம் தெற்கு தெரு பகுதியில் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டியையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், நகர செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் சண்முகம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர்கள் மஞ்சுளாதேவி, கலைச்செல்வி, புஷ்பராஜ், பைஸ் அகமது, வட்டச் செயலாளர்கள் பி.ஆர்.பால சுப்பிரமணியன், கிராப்பட்டி செல்வம், பந்தல் ராமு, மூக்கன், முரளிதரன், ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.