திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று (அக்.8) நடைபெறும் ஸ்ரீரங்கம் தொகுதி கழக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். அவரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் கலைஞர் அறிவாலயத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற அவர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் திண்டுக்கல் புறப்பட்டு செல்கிறார்.
Comments are closed.