Rock Fort Times
Online News

மாற்றுத்திறனாளி க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அபினி மங்கலத்தை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளி யான இவர், கடந்த மே 31ம் தேதி, திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து தனது நிலையை எடுத்துக்கூறி, தான் சொந்தமாக தொழில் செய்ய விரும்புவதாகவும், அதற்கு தங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதை கேட்ட அமைச்சர் நேரு, தேர்தல் விதிமுறைகள் தற்போது நடைமுறையில் இருப்பதால் தேர்தல் முடிந்ததும் நிச்சயமாக என்னால் இயன்ற உதவி செய்து தருகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிந்து விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டதால் தன்னை சந்தித்து கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி செல்வத்தை நேரில் அழைத்த அமைச்சர் கே.என்.நேரு அவர் விருப்பப்படியே, ஜெராக்ஸ் கடை வைப்பதற்கு தேவையான ஜெராக்ஸ் மெஷின் மற்றும் பிரிண்டிங் மெஷின் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி வழங்கினார்.
அப்போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, லால்குடி சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்