Rock Fort Times
Online News

திருச்சியில் பிளஸ்-1 தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் “விசிட்”…! (வீடியோ இணைப்பு)

தமிழகம் முழுவதும் இன்று(05-03-2025) பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொது தேர்வை 15,357 மாணவர்களும் 16 ,737 மாணவிகளும் ஆக மொத்தம் 32,094 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 446 பேர் பொது தேர்வை தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர்.

இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள இ.ஆர் பள்ளி தேர்வு மையத்திற்கு திடீரென வருகை தந்து பார்வையிட்டார். பின்னர், அங்கு மாணவர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தேர்வை சிறப்பாக எழுதும்படி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்