Rock Fort Times
Online News

போலி பாஸ்போர்ட்டில் சவுதிக்கு செல்ல முயன்றவர் கைது…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மோங்கில்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). இவர் நேற்று ( 07.01.2024 ) திண்டுக்கல்லில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சவுதி செல்ல திட்டமிட்டு இருந்தார். திருச்சி விமான நிலையத்தில் ஆறுமுகத்தின் பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் வாங்கி சோதனை செய்த போது அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியை மாற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் ஆறுமுகத்தை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்