Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த மலேசிய சுற்றுலா பயணி திடீர் உயிரிழப்பு…!

மலேசியா, ஸ்ரீ புல்லாகி ஜோக்கர் பகுதியை சேர்ந்தவர் லோகன் (வயது 79 ). இவர் மலேசியாவில் இருந்து குடும்பத்தினரோடு திருச்சிக்கு சுற்றுலா வந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து மனைவியுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அவரது மனைவி சுப்பம்மாள் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்