Rock Fort Times
Online News

திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் மார்ச் 31-ம் தேதி முக்கிய மாற்றம்..!

ஈரோடு மாவட்டம், பாசூர் ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக 31-03-2025 (திங்கட்கிழமை) திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூருடன் நிறுத்தப்படும். ஈரோட்டுக்கு இயக்கப்படாது. இதுபோல் அன்று ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதில், கரூரில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும். ஈரோட்டில் இருந்து இயங்காது. மேலும் மறு மார்க்கத்தில் செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) செங்கோட்டையில் அன்று அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ஈரோட்டுக்கு வராது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்