திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக செல்வி இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் திடீரென செல்வி வீட்டிலிருந்து மாயமானார். அவரை முருகன் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபருடன் ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசில் முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியை தேடி வருகிறார்.

Comments are closed.