ஆன்லைன் சூதாட்டங்கள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன. அதன்படி., திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த முருகன் என்பவர், தனியார் வங்கியின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். இவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த முருகன்(32) தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டன சமூக இடத்திற்கு வந்த புழல் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.