திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர், மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் டீலர்ஷிப் எடுத்து தண்ணீர் வியாபாரம் செய்து வந்தார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சரவணன்
மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.