Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்திய லாரி பறிமுதல் – ஒருவர் கைது

2 பேருக்கு வலைவீச்சு

ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான போலீசார் ஸ்ரீரங்கம் இரணியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். லாரியில் மணல் ஏற்றி செல்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் லாரியை பறிமுதல் செய்த போலீசார், கண்ணன் என்பவரை கைது செய்தனர். மேலும், லாரியின் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்