ஜாக் தலைவர் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை பார் கவுன்சில் திரும்ப பெற வலியுறுத்தியும், வக்கீல்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வலியுறுத்தியும், சேமநல நிதியை, ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க கோரியும், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் சசிகுமார், இணைச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், தமிழ்நாடு பார் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரகுமார், குற்றவியல் சங்க தலைவர் சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.