Rock Fort Times
Online News

நில அபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…!

மதுரை, சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் இடத்தை அபகரித்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மு.க. அழகிரி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மு.க. அழகிரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சரியான கருத்தை தான் பிறப்பித்துள்ளது எனவும், எனவே வழக்கை அங்கே சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்