லால்குடி, அரியலூர் ரயில் நிலையங்கள் ரூ.11.51 கோடியில் மேம்படுத்தப்படுகிறது…. திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல் …
அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் முக்கிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களாகும். இந்த ரயில் நிலையங்களின் நெட்வொர்க் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் அமிர்த பாரத்ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் லால்குடி ரயில் நிலையம் ரூ.6.27 கோடியிலும், அரியலூர் ரயில் நிலையம் ரூ.5.24 கோடியிலும் மேம்படுத்தப்பட உள்ளன. லால்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிக்கான மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.