மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உழைப்பாளர் சின்னத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் எம்பி அருண்நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.