கர்நாடகத்தில் இன்று( ஜூன் 17) காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய டி.கே. சிவக்குமார், “பள்ளி நாட்களில் நான் சாரணர் இயக்கத்தில் இருந்தேன், மரங்களை காப்பாற்றவும், தண்ணீரை சேமிக்கவும், நெகிழியைத் தடை செய்யவும் குழந்தைகளுக்கு ஊக்குவிக்க விரும்புகிறோம்.
மரங்கள் வளர்க்கப்பட வேண்டும், மழை வர வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி” எனத் தெரிவித்தார். இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் திரும்பினார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகிலிருந்த பாதுகாப்புப் படையினர் அவரை தாங்கி பிடித்ததால், அவர் காயமடையவில்லை. துணை முதல்வர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.