கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்கம் : வானில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்…
2 அமைச்சர்கள் பங்கேற்பு...
தமிழ்நாட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கான “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” தொடக்க விழா காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று ( 15.09.2023 ) தொடங்கி வைக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்வு திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலைபால்பண்னை ரவுண்டானா அருகே நடந்தது. தி.மு.க.முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு ராட்சத பலூனை வானில் பறக்க விட்டனர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.