பெரம்பலூரில் மார்ச் 8-ம் தேதி 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- படித்த இளைஞர்களுக்கு கே.என்.அருண் நேரு எம்.பி.அழைப்பு….!
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என உறுதியளிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உண்டாக்கி தருவதுடன் தனியார் துறை சார்ந்த வேலைக்கான பணி ஆணைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகிய நான் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறேன்.
அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் , வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் ரோவர் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 8.03.2025( சனிக்கிழமை)அன்று தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, தண்ணீர் பந்தல், பெரம்பலூரில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவை துறை, விற்பனை துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்புகள் வழங்க உள்ளனர். மேலும், சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன தேசிய அளவிலான தனியார் வேலை இணையதள சேர்க்கை மற்றும் தொழில் பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கையும் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான ஆலோசனைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன. இந்த தனியாத் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் டிப்ளமோ போன்ற கல்வி தகுதியுடைய 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் பெரம்பலூர்-94990 55913 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ADVERTISEMENT… 👇
Comments are closed.