Rock Fort Times
Online News

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு: ” தில்லாலங்கடி” பெண்கள் 2 பேர் கைது…! 

திருச்சி மாவட்டம், மன்ணச்சநல்லூர் மணியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி கலையரசி (வயது 38). இவர்  சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூர் முருகன் கோவிலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கலையரசி அருகே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.  தெப்பக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் அந்த பஸ் வந்தபோது   கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 2 1/4  பவுன் தங்கச்சங்கிலியை அருகில் நின்ற இரண்டு பெண்களும் பறித்துக்கொண்டு ஓட முயன்றனர். உடனே, கலையரசி சத்தம் போடவே அருகில் உள்ள பொதுமக்கள் இரண்டு பெண்களையும் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அந்தப் பெண்களிடம் போலீசார்  விசாரணை நடத்திய போது அவர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை நாயக்கன் தெருவை சேர்ந்த அர்ச்சனா ( 29), முத்தம்மாள் (28) என்பதும், ஓடும் பஸ்ஸில் கலையரசியிடம் தங்கச் சங்கிலி பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 1/4 பவுன்  சங்கிலியை மீட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்