திருச்சி சின்ன கம்மாள தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். புருஷோத்தமனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் தனது பூர்வீக வீட்டை புருஷோத்தமன் சமீபத்தில் விற்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த புருஷோத்தமன், தான் விற்ற வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஜெயக்குமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.