திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் ஹரிணி (வயது 24). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது தோழியுடன் சென்னை பைபாஸ் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அவா்களை பின்தொடா்ந்து வந்த மர்ம நபா்கள் இவா்களை வழிமறித்து ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ஹரிணி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபா்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.