நகைக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரம் – பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்…
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜசேகர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் பதவி வகித்தார். திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி கே.கே.நகர் போலீசார் இவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மன உளைச்சல் கொடுக்கும் வகையில் விசாரணை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்திய பிரியா ஐ.பி.எஸ்., சப்- இன்ஸ்பெக்டர் உமா சங்கரியை திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். தற்போது கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயாவையும் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.