Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்: * மூலஸ்தானத்தில் பெருமாள் தரிசனம் ரத்து…!

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் வருகிற ஆனி மாதம் 24-ம் தேதி (08.07.2025) செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் 9-ம் தேதி புதன்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும், மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்