Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!

திருச்சி, உறையூர் பகுதியில் அண்மையில் குடிநீருடன், சாக்கடை நீர் கலந்து வந்ததால் சிலர் வயிற்றுப்போக்கு, வாந்தி- பேதி போன்ற நோய்களால் அவதிப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்தநிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டு எடமலைப்பட்டி புதூர், எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த தண்ணீரை பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு உடலில் அரிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீரை குடங்களில் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்ட செந்தில்நாதன்
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கையாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாகவும், இரண்டு நாட்களில் சரி செய்து விடுவதாகவும் உறுதி அளித்தனர். அப்போது கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங், காஜாமலை பகுதி செயலாளர் கதிரவன், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார், ஐடி பிரிவு செயலாளர் தருண், நிர்வாகிகள் ஸ்டீபன், மகாலட்சுமி, தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்