பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு முன்பதிவு ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத ரயில்களையும், மெமு ரயில்களையும் அவ்வப்போது இயக்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளியை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய பலர் ஒரே நேரத்தில் முயற்சித்து வருகின்றனர். இதன் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து போன்றவை மேற்கொள்ள இயலாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.