திமுக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் எ.வ.வேலு. இவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அமைச்சரின் மகன் கம்பன் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனை 3-வது நாளாக இன்றும் (5-11-2023) அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை அசோக் நகர், தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.