திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிவுறுத்தலின்படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், லால்குடியில் கே.என்.ராமஜெயம் நினைவு கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திமுக பிரமுகரும், தொழிலதிபருமான இன்ஜினியர் எஸ். முருகவேல் ஏற்பாட்டில் பூவாளூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி திறந்து வைத்தார். கோடைகாலத்தை பொதுமக்கள் எதிர்கொள்ள வசதியாக, தர்பூசணி, நீர் மோர், உள்ளிட்ட பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், இலால்குடி நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரை.மாணிக்கம், ஒன்றியக்குழுத் தலைவர் டி.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.சண்முகநாதன் , எம்.சக்திவேல், நத்தம் பெரியய்யா, துணைச்செயலாளர்கள் ஜி.குழந்தைவேலு, பல்லபுரம் கவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.