Rock Fort Times
Online News

திருச்சியில் கற்றலைக் கொண்டாட விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்கள், மக்கள் மத்தியில் கற்றலை கொண்டாடும் வகையில விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது அதற்கான பரப்புரை வாகனம் ஒன்றையும் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களில் உலா வர உத்தரவிட்டுள்ளது. அதன்படி பரப்புரை வாகனம் திருச்சி மாவட்டப் பகுதிகளில் உலா வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒதுக்கப்பட்ட பரப்புரை வாகனத்திற்கு வழியனுப்பு விழா நடந்தது.திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், இன்று பள்ளிக் கல்வி துறையின் சார்பில்,’ எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’ என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்