Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகள் 8 ஆக மறுசீரமைப்பு…!

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 404 கிராம ஊராட்சிகளில் 4 கிராம ஊராட்சிகளை பிரித்து 8 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம ஊராட்சிகளைப் பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும் எனவும், அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற எவரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற எவரிடமிருந்தும் மறுப்பு பெறப்பட்டால் அதனை உரிய பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்