Rock Fort Times
Online News

அரசியலில் “நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை” தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்…- முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பிறகு, பா.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் ஓ.பி.எஸ்.தரப்பில் அறிவித்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் ஓபிஎஸ் மீண்டும் சந்தித்திருக்கிறார். அவருடன், மகன்  ரவிந்திரநாத், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்றார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

அரசியல் நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். அரசியலில் “நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை”. தமிழகத்திற்கு கல்வி நிதி தராததால் மத்திய பா.ஜ.க. அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. – அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். நடிகர் விஜயுடன் நானும் பேசவில்லை; அவரும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்