திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவர் ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள் இருவர் ராயப்பனை அடித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் ராயப்பன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடித் வருகின்றனர். ஜனத்திரள் நிறைந்த திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.