Rock Fort Times
Online News

“ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!

திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் டேவிட் ராபின்சன் (வயது 41). இவரை, ஸ்டாலின்ராஜ் என்பவர் அணுகி தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும், ரூ.22 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.ஒரு லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய டேவிட் ராபின்சன் கடந்த 2022-ல் ரூ.7 லட்சத்த்து 27 ஆயிரம் பணத்தை நேரடியாகவும் கூகுள் பே மூலமும் வழங்கியுள்ளார். ஆனால் ஸ்டாலின் ராஜ் கூறியபடி ஓராண்டு கழித்து லாபம் தரவில்லை. இதுகுறித்து டேவிட் ராபின்சன் பலமுறை கேட்டபோது ஸ்டாலின் ராஜ் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் லாப பணம் கூட தனக்கு வேண்டாம், கொடுத்த பணத்தையாவது திருப்பிக் கொடு என்று கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்டாலின்ராஜ், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட டேவிட் ராபின்சன் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா, ஸ்டாலின் ராஜு மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்