கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. நீதிமன்றவளாகத்தில் ஜே.எம்.ஒன் கோர்ட்டில் ஆசிட் பாட்டிலுடன் வந்த ஒருவர் அங்கிருந்து பெண் மீது வீசிவிட்டு ஓடினார். விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் கவிதா என்பதும் அவரது கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மனைவி கவிதா மீது வீசினார் என்பதும் இதனால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் சிவகுமார் தப்பிக்க முயன்ற போது வழக்கறிஞர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அப்படி ஒப்படைக்க முயன்றபோது காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாகனத்தில் உள்ளே சிவகுமாரை ஏற்ற விடாமல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே ஆசிட் வீசுகிறாயா என்று தாக்க முற்பட்டனர் . போலீசார் தடுத்தனர். வழக்கறிஞர்கள் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். நீதிமன்றத்தில் மனைவியின் அருகே வந்த கணவன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை எடுத்து மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார். மனைவி கவிதாஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
கணவர் சிவகுமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
