திருச்சி, ஜீவா நகர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பிச்சை.இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 42) .இவர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.