திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது கோவிலில் கோடை திருநாள்( பூச்சாற்று உற்சவம்) நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திர வெயிலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாகம் தணிக்கும் பொருட்டு கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் தினமும் மூலிகை நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பக்தர்களுக்கு கூடுதலாக பானகம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று( மே 6) முதல் ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் உபயதாரர்கள் செலவில் பக்தர்களுக்கு பானகம் வழங்கப்படுகிறது. இதனை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.