திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பபட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி ( வயது 23). இவர் டிப்பர் லாரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஊனையூரில் குளம் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது ராமசாமி, டிப்பர் லாரிக்கு ஆயில் ஊற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் டிப்பர் லாரி திடீரென நகர்ந்து பின்னோக்கி வந்தது. இதில், டிப்பர் லாரியில் சிக்கி ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.