Rock Fort Times
Online News

கோவை இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை! 2 துப்பாக்கிகள் பறிமுதல்!

கோவை புலியகுளம் பகுதியில் வசித்து வரும் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் தனிப்படை போலீசார் சுமார் ஒன்றரை மணி நேரமாக சோதனை மேற்கொண்டதில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உதவி ஆணையாளர் சதீஷ் தலைமையில் வந்த தனிப்படை போலீசார், ரவி வீட்டில் ஒன்றரை மணி நேரமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த சோதனையில் தனிப்படை போலீசார் ரவி வீட்டிலிருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக அயோத்தி ரவியை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்