Rock Fort Times
Online News

திருச்சி அருகே பட்டதாரி பெண் எரித்துக் கொலை- காட்டில் சடலமாகக் கிடந்ததால் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி–கலா தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகளின் படிப்பிற்காக இவர்கள் தற்போது திருச்சி வயலூர் சாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களது மகள் மீரா ஜாஸ்மின். சமீபத்தில் எம்.எஸ்.சி கணிதம் முடித்த இவர், நேற்று காலை பெற்றோர்களிடம் நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார், மீரா ஜாஸ்மின் செல்போன் டவர் எந்தப் பகுதியை காட்டுகிறது என இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது சனமங்கலம் காப்பு காட்டு பகுதியை காட்டியதால் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது காட்டுப் பகுதியில் மீரா ஜாஸ்மின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மீரா ஜாஸ்மின் உடல் கிடந்த இடத்தின் அருகே 2 பீர் பாட்டில்கள் கிடந்தன. இதனால், அந்தப் பெண்ணை யாரோ காட்டு பகுதிக்கு அழைத்து வந்து மது அருந்திவிட்டு அந்த பெண்ணை கொலை செய்து எரித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்